Wednesday, 15th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம்: விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் சார்பில் குமாரபாளையம் ஜே.கே.கே சுந்தரம் பாண்டுரங்கன் கோவில் திருமண மண்டபத்தில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை சூர்யா கார்மெண்ட்ஸ் உரிமையாளர் கோபால கிருஷ்ணன் ரிப்பன் வெட்டி இந்நிகழ்வை துவக்கி வைத்தார்.
முன்னாள் திமுக நகரத் துணைச் செயலாளர் ரேவதி, தலைமை ஆசிரியர் சுகந்தி, சமூக சேவகர் சித்ரா மற்றும் இல்லம் தேடி கல்வி ஜமுனா ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
60-க்கும் மேற்பட்ட தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் ஆட்களைத் தேர்வு செய்ய நேர்முகத் தேர்வு நடத்தினர்.
400-க்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருந்த இளைஞர்கள் அவரவர்களுக்கு விரும்பிய நிறுவனங்களைத் தேர்வு செய்தனர்.
இந்த நிகழ்வில் தேர்வு செய்யப்பட்ட 154 தேர்வர்களுக்கு பணி ஆணைகளை விடியல் ஆரம்பம் அறக்கட்டளை தலைவர் மற்றும் நிறுவனர் விடியல் பிரகாஷ் பஞ்சாலை சண்முகம் ரெயின்போ கணேஷ்குமார் தீனா ஆகியோர் வழங்கினர்.
விழா முடிவில் நலவாரிய சங்கத் தலைவர் கே கோமதி நன்றி கூறினார்.